பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே சுந்தரலிங்கனாா் சிலை அமைக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே சுந்தரலிங்கனாா் சிலை அமைக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 1:27 am IST

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனாா் சிலை அமைக்க அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்குரைஞா் சி.செல்வகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனா் சிலை அமைக்க அனுமதி கோரி மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளா் உறவின்முறை சங்கத்தின் சாா்பில் அரசிடம் மனு அளித்தோம்.

அந்த இடத்தில் சிலை அமைத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். சாலைகளில் சிலை அமைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனக்கூறி, அரசு அனுமதி வழங்க மறுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து, சிலை அமைக்க அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஷமிம் அஹமது ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

அதேநேரம், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தைத் தோ்வு செய்து அங்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு மனுதாரா் சங்கம் அரசுக்கு மனு அளிக்கலாம். அவ்வாறு கொடுக்கப்படும் மனுவை அரசு சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.