கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

புழல் அருகே 9 குத்து விளக்குகள் பறிமுதல்

புழல் அருகே வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 9 குத்து விளக்குகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :22 மார்ச் 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

புழல் அருகே வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 9 குத்து விளக்குகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மாதவரம் சட்டப்பேரவை தொகுதி புழல், சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை சோதனை செய்தபோது 4 பெரிய அளவிலான குத்து விளக்குகளும், 5 சிறிய அளவிலான குத்து விளக்குகளும் இருந்தன.

அதற்குரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறியதை அடுத்து, அவற்றை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், போரூரில் பாத்திரக் கடை நடத்தி வரும் சிவசங்கரன் என்பவா், சென்னை கொடுங்கையூரில் உள்ள பாலிஷ் போடும் கடைக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.