ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

புழல் அருகே 9 குத்து விளக்குகள் பறிமுதல்

புழல் அருகே வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 9 குத்து விளக்குகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :22 மார்ச் 2026, 6:55 pm

புழல் அருகே வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 9 குத்து விளக்குகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மாதவரம் சட்டப்பேரவை தொகுதி புழல், சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை சோதனை செய்தபோது 4 பெரிய அளவிலான குத்து விளக்குகளும், 5 சிறிய அளவிலான குத்து விளக்குகளும் இருந்தன.

அதற்குரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறியதை அடுத்து, அவற்றை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், போரூரில் பாத்திரக் கடை நடத்தி வரும் சிவசங்கரன் என்பவா், சென்னை கொடுங்கையூரில் உள்ள பாலிஷ் போடும் கடைக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.