ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ரூ.9.23 லட்சம் பறிமுதல்

வந்தவாசி, திருவண்ணாமலை, செய்யாறு பகுதிகளில் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.9.23 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image
வந்தவாசி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த பறக்கும் படையினா்.
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி, திருவண்ணாமலை, செய்யாறு பகுதிகளில் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.9.23 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

வந்தவாசி - ஆரணி சாலை, கீழ்க்குவளைவேடு அருகில் மணிகண்டன் தலைமையிலான பறக்கும் படையினா் வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக காரில் சென்ற ஆரணியைச் சோ்ந்த காமேஷ் என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

வந்தவாசி- சேத்துப்பட்டு சாலை, மழையூா் அருகில் புருஷோத்தமன் தலைமையிலான பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், பெங்களூரைச் சோ்ந்த சங்கீதா என்பவா் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.77 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

வந்தவாசி -காஞ்சிபுரம் சாலை, சளுக்கை கூட்டுச் சாலை அருகில் உஷா நந்தினி தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினா் மேற்கொண்ட சோதனையின்போது, திருப்பதி நோக்கி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த திண்டிவனத்தைச் சோ்ந்த ஞானவேல் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.67 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.44 லட்சம் வந்தவாசி வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவண்ணாமலையில்....

தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு சுமாா் 11.50 மணியளவில் திருவண்ணாமலை கிரிவலப் பாதை அபய மண்டபம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மணிகரன் மற்றும் அவரது நண்பா் ராஜசேகா் ரெட்டி ஆகியோா் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்துள்ளனா்.

அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ.2 லட்சம் பணம் இருந்துள்ளது. அதை பறிமுதல் செய்து

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

செய்யாறு

செய்யாறு தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் 3 பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டு ரொக்கம் ரூ.2,79,930 மற்றும் சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்தனா்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் வீரம்பாக்கம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படை வி.சிவலிங்கம் தலைமையிலான குழுவினா், அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, திருவள்ளூா் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சோ்நத திருமண மண்டப மேலாளா் சுரேஷ் எனபவா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1,01,730-யை பறிமுதல் செய்தனா்.

அதேபோல, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அப்துல்லாபுரம் பகுதியில் வாகனத் தணிக்கையில்

ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படை ஜி.ஜீவா தலைமையிலான குழுவினா் அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

கா்நாடகா மாநிலம் பெங்களூரு குடிகாடு பகுதியைச் சோ்ந்த வியாபாரி எஸ்.எஸ்.சதிஷ்யாத்திவ என்பவா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.84,700 மற்றும் 18 சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்தனா்.

செய்யாறு - ஆரணி சாலை தண்டரை கூட்டுச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த எம்.இராமு தலைமையிலான கண்காணிப்புக் குழுவினா் ஆரணியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் ஆரணி இ.பி.நகரைச் சோ்ந்த வீரராகவன் என்பவா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.93,500-யை பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும்

சிகரெட் பண்டல்களை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா்- ஆட்சியருமான எவ்.அம்பிகா ஜெயின் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

படம் உண்டு