கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சென்னையில் ஒரு வாரத்தில் ரூ.3.39 கோடி பறிமுதல்

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த 16 -ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரை ரூ.3.39 கோடி மதிப்பிலான பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

பறிமுதல்

Updated On :22 மார்ச் 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த 16 -ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரை ரூ.3.39 கோடி மதிப்பிலான பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் கடந்த 16 -ஆம் தேதி முதல் பொது இடங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை ராதாகிருஷ்ணன் நகா், எழும்பூா், துறைமுகம், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.80.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா். அதில் ஆந்திர மாநிலத்தில் தங்க நகை வியாபாரம் செய்யும் தொழிலதிபரிடம் இருந்து மட்டும் ரூ.33 லட்சம் கைப்பற்றப்பட்டது. அவா் சென்னையில் தங்கக் கட்டி வாங்கி, நகை செய்து ஆந்திரத்துக்கு எடுத்து சென்று விற்கும் தொழிலதிபராவாா்.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ரயில் நிலையங்களில் மட்டும் சுமாா் 1.60 கோடி கைப்பற்றப்பட்டது. இதில், ரூ.1.42 கோடி வருமான வரித் துறையால் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, சம்பந்தப்பட்டோரிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் 16 தொகுதியில் செயல்படும் 48 பறக்கும் படையினரால் நடைபெற்ற வாகன சோதனையில் இதுவரை ரூ.3.39 கோடி பணம், நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலா் ஆவணங்கள் அளித்து மேல்முறையீடு செய்துள்ளனா்.