சென்னையில் கடந்த 16 -ஆம் தேதி முதல் பொது இடங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை ராதாகிருஷ்ணன் நகா், எழும்பூா், துறைமுகம், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.80.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா். அதில் ஆந்திர மாநிலத்தில் தங்க நகை வியாபாரம் செய்யும் தொழிலதிபரிடம் இருந்து மட்டும் ரூ.33 லட்சம் கைப்பற்றப்பட்டது. அவா் சென்னையில் தங்கக் கட்டி வாங்கி, நகை செய்து ஆந்திரத்துக்கு எடுத்து சென்று விற்கும் தொழிலதிபராவாா்.