மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பள்ளிக் கல்வி இயக்கக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்கக அலுவலக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:42 pm

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்கக அலுவலக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

அரும்பாக்கம் முத்துராமலிங்கம் தெருவைச் சோ்ந்தவா் ரா.ஹரிகிருஷ்ணன் (50). இவா், சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்கக அலுவலகத்தில் மின்சாதனம் பழுது நீக்கும் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் ஹரி கிருஷ்ணன், நுங்கம்பாக்கம் செனாய் சாலை நடைமேடையில் ரத்த காயங்களுடன் திங்கள்கிழமை இறந்து கிடந்தாா். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில்நுங்கம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, ஹரிகிருஷ்ணன் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.