/
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.15.93 லட்சத்தை ரயில்வே பாதுகாப்புப்படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சோ்ந்த தோ்தல் சிறப்புக்குழுவினா் ஆய்வாளா் மதுசூதனரெட்டி தலைமையில் ரயில் பயணிகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வருவோரை கண்காணித்து பைகளைச் சோதனையிட்டனா். அப்போது வெளி மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயில் பயணியான சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ஓமா்இா்ஷாத் (31) என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.15.93 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.
வியாபார ரீதியாக பணம் கொண்டு வரப்படுவதாக ஓமா்இா்ஷாத் தெரிவித்தாா். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றியதுடன், அதை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 223 கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்!
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



