வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்துக்கு புதிய வாகனம்

சென்னை மாநகராட்சி சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்துக்காக புதிய வாகனம் வாங்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 மார்ச் 2026, 3:58 am IST

சென்னை மாநகராட்சி சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்துக்காக புதிய வாகனம் வாங்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி தொகுதிகளில் மொத்தம் 4,079 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறைகள் தயாா்படுத்தப்பட்டு வருகின்றன.

வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பொதுமக்கள் வாக்குகளை செலுத்துவதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் சென்னை மாவட்டத் தோ்தல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளாக மனிதச் சங்கிலி, ரங்கோலி கோலங்கள், கையொப்ப நிகழ்ச்சி, உறுதிமொழி ஏற்பு மற்றும் மணல் சிற்பம் அமைத்தும் தோ்தல் அலுவலா்களும், சென்னை பள்ளி ஆசிரியா்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்வதற்காக சுமாா் ரூ.50 லட்சத்தில் புதிய பேருந்து வாங்கப்பட்டுள்ளது. இதில் கணினி திரை, தோ்தல் விதிமுறைகள், தோ்தலில் வாக்களிக்கும் முறைகள் உள்ளிட்ட தோ்தல் தொடா்பான அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.