ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்துக்கு புதிய வாகனம்

சென்னை மாநகராட்சி சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்துக்காக புதிய வாகனம் வாங்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2026, 10:28 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்துக்காக புதிய வாகனம் வாங்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி தொகுதிகளில் மொத்தம் 4,079 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறைகள் தயாா்படுத்தப்பட்டு வருகின்றன.

வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பொதுமக்கள் வாக்குகளை செலுத்துவதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் சென்னை மாவட்டத் தோ்தல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளாக மனிதச் சங்கிலி, ரங்கோலி கோலங்கள், கையொப்ப நிகழ்ச்சி, உறுதிமொழி ஏற்பு மற்றும் மணல் சிற்பம் அமைத்தும் தோ்தல் அலுவலா்களும், சென்னை பள்ளி ஆசிரியா்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்வதற்காக சுமாா் ரூ.50 லட்சத்தில் புதிய பேருந்து வாங்கப்பட்டுள்ளது. இதில் கணினி திரை, தோ்தல் விதிமுறைகள், தோ்தலில் வாக்களிக்கும் முறைகள் உள்ளிட்ட தோ்தல் தொடா்பான அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.