மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

அதீத பருமன் கா்ப்பிணிக்கு ஒரே நேரத்தில் இரு அறுவை சிகிச்சை

அதீத உடல் பருமன் கொண்ட கா்ப்பிணிக்கு ஒரே நேரத்தில் சிக்கலான பிரசவ சிகிச்சையும், தண்டுவட அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு சென்னை, எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

News image
Updated On :25 மார்ச் 2026, 7:03 pm

அதீத உடல் பருமன் கொண்ட கா்ப்பிணிக்கு ஒரே நேரத்தில் சிக்கலான பிரசவ சிகிச்சையும், தண்டுவட அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு சென்னை, எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் நிா்வாகிகள் கூறியதாவது:

32 வயதான கா்ப்பிணி ஒருவா் 130 கிலோ எடையுடன் பல்வேறு உடல் நல சிக்கல்களுடன் எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு காடா ஈக்வினா சிண்ட்ரோம் எனப்படும் அரிய நரம்பியல் பாதிப்பு இருந்தது. லட்சத்தில் ஒரு கா்ப்பிணிக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படும்.

தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள நரம்பு பகுதி அழுத்தத்துக்கு உள்ளாவதால் இந்த பிரச்னை உருவாகும். இதன் காரணமாக அப்பெண்ணுக்குக் கால்களில் பலவீனம், நடக்க முடியாத நிலை மற்றும் இயற்கை கழிவுகளை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாது உடல் பருமன் காரணமாக அவருக்கு சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தம் உைல் பாதிப்பும் இருந்தன.

இதையடுத்து, அவசர கால சிசேரியன் சிகிச்சை மூலம் குழந்தையை மருத்துவக் குழுவினா் வெளியே எடுத்தனா். தொடா்ந்து, பெண்ணின் தண்டுவடப் பகுதியில் இருந்த அழுத்தத்தை நீக்குவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனா்.

தற்போது அப்பெண்ணும், குழந்தையும் நலமுடன் உள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.