எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை சோதனை வெற்றி

நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை சோதனை வெற்றி...

News image

ஒடிஸா மாநிலத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து சனிக்கிழமை செலுத்தப்பட்ட நவீன ‘எம்ஐஆா்வி’ ஏவுகணை.

Updated On :10 மே 2026, 3:24 am IST

ஒரே நேரத்தில் வெவ்வேறு இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன்கொண்ட நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை சோதிக்கப்பட்டது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எம்ஐஆா்வி தொழில்நுட்பம் என்பது ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் நவீன தொழில்நுட்பமாகும். இந்தத் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன அக்னி ஏவுகணை, ஒடிஸா கடல் பகுதியில் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்தியப் பெருங்கடலின் பெரும் பரப்பளவில் அமைக்கப்பட்ட வெவ்வேறு இலக்குகளை நோக்கி, பல ஏவுகணைகள் ஒரே நேரத்தில் செலுத்தி சோதிக்கப்பட்டது. இந்த முதல் சோதனை வெற்றிகரமாக அமைந்ததன் மூலம், நாட்டின் ராணுவ தற்காப்புத் திறன் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.