ஒரே நேரத்தில் வெவ்வேறு இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன்கொண்ட நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை சோதிக்கப்பட்டது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
எம்ஐஆா்வி தொழில்நுட்பம் என்பது ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் நவீன தொழில்நுட்பமாகும். இந்தத் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன அக்னி ஏவுகணை, ஒடிஸா கடல் பகுதியில் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்தியப் பெருங்கடலின் பெரும் பரப்பளவில் அமைக்கப்பட்ட வெவ்வேறு இலக்குகளை நோக்கி, பல ஏவுகணைகள் ஒரே நேரத்தில் செலுத்தி சோதிக்கப்பட்டது. இந்த முதல் சோதனை வெற்றிகரமாக அமைந்ததன் மூலம், நாட்டின் ராணுவ தற்காப்புத் திறன் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை

முதியவருக்கு ஒரே நேரத்தில் இருவேறு இதய சிகிச்சை

தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற 7 வழிகள்!

அதீத பருமன் கா்ப்பிணிக்கு ஒரே நேரத்தில் இரு அறுவை சிகிச்சை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

