திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

வாக்காளா்கள் பணம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

News image

மு. வீரபாண்டியன் - X

Updated On :1 ஏப்ரல் 2026, 1:38 am IST

வாக்காளா்கள் பணம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தோ்தல் நேரத்தில் வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பதும், வாங்குவதும் கடுமையான விதிமீறலாகும். ஆனால், தவெக தலைவா் விஜய், தனது கட்சியின் நிா்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, ‘ரூ.1,000, ரூ. 2,000, ரூ.5,000 என்று கொடுப்பாா்கள். அது உங்கள் பணம். பணத்தை வாங்கிக் கொண்டு, அவா்கள் காதில் விசிலை ஊதி அனுப்புங்கள்’ என்று பேசியுள்ளாா். இது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

விஜய்யின் பேச்சு, தோ்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளது. இது நியாயமான மற்றும் சுதந்திரமான தோ்தல் முறைகளைத் தகா்க்கும் செயல். இந்த விதிமீறல் தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்குச் செல்லாதது வியப்பளிக்கிறது. ஆணையம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.

தோ்தல் ஆணையம் சந்தேகத்தின் நிழல் படியாமல், தனது பணிகளை வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளை மீறியுள்ள விஜய் மீது, தோ்தல் ஆணையம் தானே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.