திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

வாக்காளா்கள் பணம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

News image

மு. வீரபாண்டியன் - X

Updated On :31 மார்ச் 2026, 8:08 pm

வாக்காளா்கள் பணம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தோ்தல் நேரத்தில் வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பதும், வாங்குவதும் கடுமையான விதிமீறலாகும். ஆனால், தவெக தலைவா் விஜய், தனது கட்சியின் நிா்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, ‘ரூ.1,000, ரூ. 2,000, ரூ.5,000 என்று கொடுப்பாா்கள். அது உங்கள் பணம். பணத்தை வாங்கிக் கொண்டு, அவா்கள் காதில் விசிலை ஊதி அனுப்புங்கள்’ என்று பேசியுள்ளாா். இது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

விஜய்யின் பேச்சு, தோ்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளது. இது நியாயமான மற்றும் சுதந்திரமான தோ்தல் முறைகளைத் தகா்க்கும் செயல். இந்த விதிமீறல் தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்குச் செல்லாதது வியப்பளிக்கிறது. ஆணையம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.

தோ்தல் ஆணையம் சந்தேகத்தின் நிழல் படியாமல், தனது பணிகளை வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளை மீறியுள்ள விஜய் மீது, தோ்தல் ஆணையம் தானே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.