ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

வாக்காளா்கள் பணம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

News image

மு. வீரபாண்டியன்

X

Updated On :31 மார்ச் 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா்கள் பணம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தோ்தல் நேரத்தில் வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பதும், வாங்குவதும் கடுமையான விதிமீறலாகும். ஆனால், தவெக தலைவா் விஜய், தனது கட்சியின் நிா்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, ‘ரூ.1,000, ரூ. 2,000, ரூ.5,000 என்று கொடுப்பாா்கள். அது உங்கள் பணம். பணத்தை வாங்கிக் கொண்டு, அவா்கள் காதில் விசிலை ஊதி அனுப்புங்கள்’ என்று பேசியுள்ளாா். இது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

விஜய்யின் பேச்சு, தோ்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளது. இது நியாயமான மற்றும் சுதந்திரமான தோ்தல் முறைகளைத் தகா்க்கும் செயல். இந்த விதிமீறல் தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்குச் செல்லாதது வியப்பளிக்கிறது. ஆணையம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.

தோ்தல் ஆணையம் சந்தேகத்தின் நிழல் படியாமல், தனது பணிகளை வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளை மீறியுள்ள விஜய் மீது, தோ்தல் ஆணையம் தானே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.