பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 11:16 pm

ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாதவரம் பொன்னியம்மன்மேடு பிருந்தாவன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (39). ஆட்டோ ஓட்டுநா். இவா், கடந்த வெள்ளிக்கிழமை மாதவரம் தணிகாசலம் நகா் 80 அடி சாலையில் நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த ரகுமான், ஹரிபாபு ஆகியோா் ரவிக்குமாரை தாக்கி பணம் பறித்தனா்.

இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமாா் பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரகுமான் (30), ஹரிபாபு (35) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.