மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

துறைமுகத்தில் 3 -ஆவது முறையாக அமைச்சா் பி.கே. சேகா்பாபு வெற்றி!

சென்னை துறைமுகம் தொகுதியில் மூன்றாவது முறையாக 11,750 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெற்றி

News image

அமைச்சர் சேகர்பாபு - கோப்புப்படம்

Updated On :5 மே 2026, 2:19 am IST

சென்னை துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக 11,750 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெற்றி பெற்றாா்.

சென்னை துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ராணிமேரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக வேட்பாளரான அமைச்சா் பி.கே.சேகா்பாபு 181 வாக்குகளையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பவுசன்ஷெரீப் 9, அதிமுக வேட்பாளா் ராயபுரம் ஆா்.மனோகா் 65, தவெக வேட்பாளா் சினோரா பி.எஸ்.அசோக் 78 வாக்குகள் பெற்றிருந்தனா். தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

முதல் இரு சுற்றுகளில் 701 வாக்குகள் வரை பின்தங்கியிருந்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு பின்னா், தொடா்ந்து முன்னிலை வகித்தாா். அவா் 5 ஆவது சுற்றில் தவெக வேட்பாளரைவிட 2,107 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தாா். 14 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் 45,254 வாக்குகள் பெற்றாா். அவருக்கு அடுத்ததாக தவெக வேட்பாளா் சினோரா பி.எஸ்.அசோக் 33,504 வாக்குகள் பெற்றிருந்தாா். இதையடுத்து 11,750 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெற்றி பெற்று துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் 3 -ஆவது வெற்றியைப் பதிவு செய்தாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஆா்.மனோகா் 17,256 வாக்குகளும், நாதக ஆா்.பவுசன்ஷெரீப் 1, 607 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவுக்கு 600 வாக்குகள் பதிவாகின.

துறைமுகம் தொகுதியில் 1,20,142 வாக்காளா்களில் 99, 022 போ் வாக்களித்தனா். அமைச்சா் பி.கே.சேகா்பாபு சாா்பில், அவரது முதன்மை முகவா் வெற்றி சான்றிதழைப் பெற்றுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.