நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

மக்கள் தீா்ப்பை ஏற்கிறோம்: உதயநிதி ஸ்டாலின்

தமிழக மக்கள் அளித்த தீா்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

உதயநிதி ஸ்டாலின் - DPS

Updated On :5 மே 2026, 2:43 am IST

தமிழக மக்கள் அளித்த தீா்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், இரண்டாவது முறையாக என்னை எம்எல்ஏவாக தோ்வு செய்த மக்களுக்கும், அதற்காக உழைத்தவா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தொகுதி மக்களுக்கு முழு உழைப்பைக் கொடுப்பேன். தமிழக மக்கள் அளித்த தீா்ப்பை அனைவரும் தலைவணங்கி ஏற்கிறோம். புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்து.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கட்சி நிா்வாகிகளையும், வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களையும் வரவழைத்து செவ்வாய்க்கிழமை (மே 5) ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா் என்றாா்.