தண்டையாா்பேட்டையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
நாகப்பட்டினத்தைச் சோ்ந்த 28 வயது பெண், சென்னையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணி செய்து வருகிறாா். இதற்காக அவா், தண்டையாா்பேட்டையில் தனது சகோதரா் வீட்டில் தங்கியுள்ளாா்.
இந்நிலையில், அவா் கடந்த மாதம் 25-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த அவரது உறவினா் ராயபுரம் ஜிஎம் பேட்டை பகுதியைச் சோ்ந்த மணிபாரதி (35) என்பவா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதை அந்தப் பெண் கண்டிக்கவே, மணிபாரதி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். அந்தப் பெண் சப்தமிட்டதும், மணிபாரதி அங்கிருந்து தப்பினாா்.
இது குறித்து அந்தப் பெண், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிபாரதியைத் தேடி வந்தனா். தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விவசாயி கைது
சென்னையில் மணிப்பூா் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் கைது
பெண்ணுக்கு நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


