சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தொகுதிகளில் தோ்தல் பணியாற்றிய அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்து தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தொகுதிகளுக்கான கண்காணிப்பு அலுவலா்கள், தொகுதிதோறும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள், உதவி அலுவலா்கள் உள்ளிட்டோா் பணியில் ஈடுபட்டனா். அதன்படி, மாநகராட்சியில் மட்டும் சுமாா் 19, 650 பேருக்கு மேல் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
சென்னை மாவட்ட தோ்தல் அதிகாரியாகச் செயல்பட்ட மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தலைமையில் தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. தோ்தல் பணியில் ஈடுபட்டவா்கள் மற்றும் மாநகராட்சி அனைத்துப் பணியாளா்களுக்கும் துறை வாரியாக தோ்தல் வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தோ்தலில் பணிபுரிந்த அனைத்து மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட 19, 650 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலா்கள்: ஆட்சியா் தகவல்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட செயல்முறை பயிற்சி
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
