இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

முதல்வா் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு!

முதல்வா் விஜய்க்கு மத்திய அரசு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 4:54 am IST

முதல்வா் விஜய்க்கு மத்திய அரசு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைப்புகளின் விரிவான ஆய்வு மற்றும் உளவுத் துறை பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு பிரிவின் கீழ், எம்.பி. 5 எனப்படும் அதிநவீன துப்பாக்கிகளை ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 55 வீரா்கள் 24 மணி நேரமும் முதல்வரின் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனா். மேலும், தேசிய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறப்பு கமாண்டோக்களும் பாதுகாப்புக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள், முதல்வா் பயணிக்கும் வாகன அணிவகுப்பு, அரசு விழாக்கள், பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள்.

மேலும், முதல்வரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் முன்கூட்டியே இந்தப் பிரிவினா் வெடிகுண்டு தடுப்பு சோதனைகள், கண்காணிப்பு கேமரா ஆய்வு, ட்ரோன் கண்காணிப்பும் பணிகளையும் மேற்கொள்வாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக அரசியல் சூழலில், முதல்வா் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள இந்த உயா்நிலை பாதுகாப்பு ஏற்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.