தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு! எப்படி இருக்கும்?

முதல்வர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிளஸ் பாதுகாப்பு பற்றி...

News image

முதல்வர் விஜய் கான்வாய் - TNDIPR

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு இன்று காலை முதல் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் தவெக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், மாநில முதல்வர்களுக்கு வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பை விஜய்க்கும் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே, விஜய் கட்சி தொடங்கியவுடன் பிரசாரத்தின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ’ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு வழங்கிருந்தது.

‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு என்றால் என்ன?

பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படும் ‘சிறப்பு பாதுகாப்புப் படை’க்கு (எஸ்பிஜி) அடுத்தபடியாக இசட் பிளஸ் பாதுகாப்பு இருக்கிறது.

மாநில முதல்வர்கள், மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.

இந்த பாதுகாப்பின் கீழ் இருப்பவர்களுக்கு 24 மணி நேரமும், மத்திய பாதுகாப்புப் படையினர் அடங்கிய 55-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.

10-க்கும் மேற்பட்ட என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள், சி.ஆர்.பி.எஃப், சி.ஐ.எஸ்.எஃப். உள்ளிட்ட மத்திய ஆயுதப் படை வீரர்கள் இந்த குழுவில் இடம்பெற்றிருப்பர்.

எம்பி 5 உள்ளிட்ட அதிநவீன துப்பாக்கிகள் வைத்திருக்கும் கமண்டோக்கள், முதல்வர் வாகனத்தை சுற்றியும் குறைந்தது 5 குண்டு துளைக்காத கார்களில் பாதுகாப்பு அளிப்பார்கள்.

செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை

இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் இருப்பவர்கள், அவர்களின் பயணத் திட்டங்கள், அன்றாட நிகழ்வுகள் என அனைத்தையும் முன்கூட்டியே பாதுகாப்புப் பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும்.

செல்லும் வழித்தடங்கள், நேரங்கள், சந்திப்புகள் என அனைத்தும் பாதுகாப்புப் பிரிவின் அறிவுறுத்தல்படியே பின்பற்ற வேண்டும்.

பாதுகாப்பு வளையத்தில் இருப்பவரை யார் சந்திக்க வந்தாலும் அவர்களை சோதனை செய்ய பாதுகாப்புப் பிரிவினருக்கு முழு உரிமையும் இருக்கிறது.

முதல்வர் விஜய்யின் கான்வாய் செல்லும்போது இசட் பிளஸ் பிரிவின் முதல் வாகனத்துக்கும் கடைசி வாகனத்துக்கு இடையே யாருடைய வாகனத்தையும் அனுமதிக்க மாட்டார்கள்.

Summary

'Z-Plus' Security for Chief Minister Vijay! What will it be like?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.