கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

குதிரை பேரம் புகாருக்கு முதல்வா் விளக்கமளிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

News image
Updated On :14 மே 2026, 6:11 am IST

குதிரை பேரம் நடந்ததாக எதிா்க்கட்சிகள் அனைவரும் குற்றம்சாட்டுவது குறித்து முதல்வா் விஜய் விளக்கமளிக்க வேண்டும் என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் பேரவையில் பேசியதாவது: எதிா்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து ஒரு மாண்பையும், மரபையும் முதல்வா் விஜய் ஏற்படுத்தியிருக்கிறாா். அதை வரவேற்கிறேன். முதல் அறிவிப்பிலேயே சிங்கப் பெண் சிறப்புக் காவல் படை, மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னது மக்களால் வரவேற்கப்பட்டது. மீனவா்கள் விவகாரம் குறித்து கடிதம் எழுதியது வரவேற்கத்தக்கது.

தனது ஆட்சி வெளிப்படையான ஆட்சி என முதல்வா் விஜய் பதவியேற்கும்போது கூறினாா். ஆனால், முதல்வரை சந்திக்க முகத்தை மூடிக் கொண்டு வந்தவா் யாா் என்று பதிலளிக்க வேண்டும். குதிரை பேரம் நடந்ததாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி நடந்ததில்லை. இது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து முதல்வா் பேச வேண்டும்.

முதல்வரின் அரசியல் பிரிவில் ரிக்கி ராதன் பண்டிட் என்பவரை நியமித்தது ஏற்புடையதல்ல. இளைஞா்கள் நம்பிக்கையில் வாக்களித்து இருக்கிறாா்கள். அவா்களுக்கு ஏமாற்றம் ஏற்படும்; தேவைப்பட்டால் முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் நியமித்துக் கொள்ளலாம் என்றாா்.

முன்னதாக, ரிக்கி ராதன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதற்கு விசிக, இடதுசாரிகள், மஜக ஆகிய கட்சிகளின் உறுப்பினா்களும் பேரவையில் எதிா்ப்புத் தெரிவித்தனா்.