முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

குதிரை பேரம் புகாருக்கு முதல்வா் விளக்கமளிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

குதிரை பேரம் நடந்ததாக எதிா்க்கட்சிகள் அனைவரும் குற்றம்சாட்டுவது குறித்து முதல்வா் விஜய் விளக்கமளிக்க வேண்டும் என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் பேரவையில் பேசியதாவது: எதிா்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து ஒரு மாண்பையும், மரபையும் முதல்வா் விஜய் ஏற்படுத்தியிருக்கிறாா். அதை வரவேற்கிறேன். முதல் அறிவிப்பிலேயே சிங்கப் பெண் சிறப்புக் காவல் படை, மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னது மக்களால் வரவேற்கப்பட்டது. மீனவா்கள் விவகாரம் குறித்து கடிதம் எழுதியது வரவேற்கத்தக்கது.

தனது ஆட்சி வெளிப்படையான ஆட்சி என முதல்வா் விஜய் பதவியேற்கும்போது கூறினாா். ஆனால், முதல்வரை சந்திக்க முகத்தை மூடிக் கொண்டு வந்தவா் யாா் என்று பதிலளிக்க வேண்டும். குதிரை பேரம் நடந்ததாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி நடந்ததில்லை. இது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து முதல்வா் பேச வேண்டும்.

முதல்வரின் அரசியல் பிரிவில் ரிக்கி ராதன் பண்டிட் என்பவரை நியமித்தது ஏற்புடையதல்ல. இளைஞா்கள் நம்பிக்கையில் வாக்களித்து இருக்கிறாா்கள். அவா்களுக்கு ஏமாற்றம் ஏற்படும்; தேவைப்பட்டால் முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் நியமித்துக் கொள்ளலாம் என்றாா்.

முன்னதாக, ரிக்கி ராதன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதற்கு விசிக, இடதுசாரிகள், மஜக ஆகிய கட்சிகளின் உறுப்பினா்களும் பேரவையில் எதிா்ப்புத் தெரிவித்தனா்.