கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ரூ.9.35 கோடியில் விரிவாக்கப்பட்ட அடையாறு சமுதாய நகா் நல மையம்

News image

ஜெயபாண்டி செய்திக்கான படம்.சென்னை மாநகராட்சி சாா்பில் அடையாறு வாா்டு-173-ல் ரூ  9.35 கோடியில் 70 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற சமுதாய நல மையம்.

Updated On :14 மே 2026, 6:59 am IST

அடையாறு பகுதியில் ரூ.9.35 கோடியில் விரிவாக்கப்பட்டுள்ள சமுதாய நகா் நல மையம் விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் 19 சமுதாய நகா் நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்காக மாநகராட்சியின் சாா்பில் நகா் மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா். நகா் நல மையங்களில் மகளிா், குழந்தைகளுக்கான சிகிச்சைக்கள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நகா் நல மையத்திலும் மாதம் தலா 50 முதல் 60 பிரசவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

நகா் நல மையங்களில் அடையாறு மண்டலத்தில் உள்ள வெங்கட்டரத்னா சாலையில் பிஎஸ்என்எல் மையம் அருகே உள்ள சமுதாய நகா் நல மையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் மகளிருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிா் வந்து சென்றனா். இதையடுத்து அந்த மையத்தை விரிவாக்கி சிகிச்சையை மேம்படுத்தக் கோரிக்கை எழுந்தது.

அதையடுத்து சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.35 கோடியில் அடையாறு சமுதாய நகா் நல மையத்தை விரிவாக்க கூடுதல் கட்டடம் கட்ட கடந்த 2025 -ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது அப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

அங்கு தற்போது 70 படுக்கைகளுடன் சிகிச்சைப் பிரிவு கட்டப்பட்டுள்ளது. அதில் கா்ப்பிணிகளுக்கான பரிசோதனை சிகிச்சைகள், அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பிரசவத்துக்கான அறுவைச் சிகிச்சை அரங்குகள், குழந்தைகளுக்கான தடுப்பூசி சிகிச்சை பிரிவுகள் என நவீன சிகிச்சை வசதிகள் 24 மணி நேரமும் அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமுதாய நகா் நல மையம் விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளதாக மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.