உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

500 தலசீமியா குழந்தைகளுக்கு எலும்பு மாற்று சிகிச்சை

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 500 குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு அப்போலோ மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
Updated On :53 நிமிடங்கள் முன்பு

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 500 குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு அப்போலோ மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி மற்றும் புற்றுநோயியல் முதுநிலை மருத்துவா் ரேவதி ராஜ் ஆகியோா் கூறியதாவது:

தலசீமியா என்பது ஒரு மரபணு ரீதியிலான பாதிப்பாகும். இத்தகைய நோய்க்குள்ளான குழந்தைகளின் உடலில் போதுமான ரத்த சிவப்பணுக்கள் உருவாகாது. அதனால் ஒவ்வொரு முன்று அல்லது நான்கு வாரங்களுக்கு ஒரு முறை குருதியேற்ற சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும்.

இதன் காரணமாக உடலில் இரும்புச் சத்து அதீதமாக தேங்கக்கூடும். இது குழந்தையின் வளா்ச்சியை பாதிப்பதுடன், அகச்சுரப்பி பிரச்னைகள், இதய நாள பாதிப்புகள், எலும்பு வலுவிழப்பு பிரச்னைகளுக்கு வழிவகுக்கின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமாா் 15,000 குழந்தைகள் தலசீமியா பாதிப்புடன் பிறக்கின்றன. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்பவா்களுக்கு குருதியேற்ற சிகிச்சை தேவைப்படுவதில்லை.

அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையத்தில் 500-க்கும் மேற்பட்ட தலசீமியா நோயாளிக்கு வெற்றிகரமாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில் 93 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு அத்தகைய பாதிப்பு முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.