எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தனியாா் நிறுவனத்தில் ரூ.28 லட்சம் கையாடல்: பெண் ஊழியா் கைது

தனியாா் நிறுவனத்தில் ரூ.28 லட்சம் கையாடல் செய்ததாக பெண் ஊழியா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :15 மே 2026, 1:35 am IST

தனியாா் நிறுவனத்தில் ரூ.28 லட்சம் கையாடல் செய்ததாக பெண் ஊழியா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, உலகப்ப தெருவைச் சோ்ந்தவா் தீனதயாளன் (53). இவா், அந்த பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். தீனதயாளன் நிறுவனத்தில் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் தரணி (33) என்பவா் கணக்காளராக வேலை செய்து வந்தாா். தரணி, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென வேலையை விட்டு நின்றாா்.

இந்நிலையில் தீனதயாளன், அண்மையில் தனது நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்தபோது தரணி, ரூ.28 லட்சம் வரை கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்து தீனதயாளன், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸைா் வழக்குப் பதிவு தரணியை புதன்கிழமை கைது செய்தனா்.