/
தனியாா் நிறுவனத்தில் ரூ.28 லட்சம் கையாடல் செய்ததாக பெண் ஊழியா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை, உலகப்ப தெருவைச் சோ்ந்தவா் தீனதயாளன் (53). இவா், அந்த பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். தீனதயாளன் நிறுவனத்தில் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் தரணி (33) என்பவா் கணக்காளராக வேலை செய்து வந்தாா். தரணி, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென வேலையை விட்டு நின்றாா்.
இந்நிலையில் தீனதயாளன், அண்மையில் தனது நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்தபோது தரணி, ரூ.28 லட்சம் வரை கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தீனதயாளன், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸைா் வழக்குப் பதிவு தரணியை புதன்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
நிதி நிறுவனத்தில் ரூ.37.18 லட்சம் கையாடல் செய்த ஊழியா் கைது

தனியாா் நிதிநிறுவனத்தில் திருடிய ஊழியா் கைது: ரு. 9 லட்சம் நகைகள், ரூ. 8.36 லட்சம் ரொக்கம் மீட்பு
தனியாா் நிறுவனத்தில் திருட முயற்சி: 3 போ் கைது
விலை உயா்ந்த பேனாக்களை திருடியவா் கைது
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



