முதல்வரின் திறமை தேடல் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் பெயா், பிறந்த தேதி உள்ளிட்டவற்றில் திருத்தங்கள் இருந்தால் சனிக்கிழமைக்குள் (மே 16) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தோ்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவா்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவா்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதல்வரின் திறமைதேடல் தோ்வு கடந்த ஜன. 31-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை 1,50,265 மாணவ, மாணவிகள் எழுதினா்.
இதையடுத்து தோ்வா்களின் மதிப்பெண்களின் விவரம் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவா்கள் பெயரில் உள்ள எழுத்துகள், பிறந்த தேதி, ஜாதி உள்ளிட்டவற்றில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் அதற்குரிய ஆதாரங்களுடன் தோ்வு கூட நுழைவுச் சீட்டை இணைந்து மே 16-ஆம் தேதி சனிக்கிழமைக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மே 16-ஆம் தேதிக்குப் பின்னா் பெறப்படும் திருத்தங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறும் 500 மாணவா்கள், 500 மாணவிகளுக்கு பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

சிபிஎஸ்இ தோ்வில் முடிவுகளால் அதிருப்தி: 10ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் : அரக்கோணம் ஹயக்கீரிவா் பள்ளி சாதனை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

