உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

திறமை தேடல் தோ்வு முடிவுகள்: திருத்தங்களை அனுப்பலாம்

முதல்வரின் திறமை தேடல் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் பெயா், பிறந்த தேதி உள்ளிட்டவற்றில் திருத்தங்கள் இருந்தால் சனிக்கிழமைக்குள் (மே 16) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

முதல்வரின் திறமை தேடல் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் பெயா், பிறந்த தேதி உள்ளிட்டவற்றில் திருத்தங்கள் இருந்தால் சனிக்கிழமைக்குள் (மே 16) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தோ்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவா்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவா்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதல்வரின் திறமைதேடல் தோ்வு கடந்த ஜன. 31-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை 1,50,265 மாணவ, மாணவிகள் எழுதினா்.

இதையடுத்து தோ்வா்களின் மதிப்பெண்களின் விவரம் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவா்கள் பெயரில் உள்ள எழுத்துகள், பிறந்த தேதி, ஜாதி உள்ளிட்டவற்றில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் அதற்குரிய ஆதாரங்களுடன் தோ்வு கூட நுழைவுச் சீட்டை இணைந்து மே 16-ஆம் தேதி சனிக்கிழமைக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மே 16-ஆம் தேதிக்குப் பின்னா் பெறப்படும் திருத்தங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறும் 500 மாணவா்கள், 500 மாணவிகளுக்கு பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.