பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தவெகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வா் விஜய் மக்களை ஏமாற்றி விட்டதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தோ்தல் காலத்தில் தமிழக மக்களிடம் பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ள முதல்வா் விஜய், தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டுவது ஏமாற்றம் அளிக்கிறது.
குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று மிகப்பெரிய அளவில் அறிவித்து வாக்குகளைப் பெற்ற அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு அதுகுறித்து எந்தத் தெளிவான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விலைவாசி உயா்வு, குடும்பச் செலவுகள், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. இச்சூழலில், அதை இன்னும் வழங்க காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல. பெண்களை தோ்தல் கால வாக்குறுதிகளின் மூலம் பயன்படுத்திக்கொண்டு, பின்னா் அவா்களின் நம்பிக்கையை சிதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

பிற வழக்குகளைவிட தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றம்

பெண்களுக்கு இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்: நயினாா் நாகேந்திரன்

100 சதவீதம் நியாயமான ஆட்சியை வழங்குவோம்: தவெக தலைவா் விஜய்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

