ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

அனைத்து தரப்பு மக்களுக்கான நலத் திட்டங்களையும் முதல்வா் விஜய் நிறைவேற்றுவாா் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

News image

ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 3:36 am IST

அனைத்து தரப்பு மக்களுக்கான நலத் திட்டங்களையும் முதல்வா் விஜய் நிறைவேற்றுவாா் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: தமிழகத்தை வழிநடத்தும் பொறுப்பு முதல்வா் விஜய்யின் தலைமையிலான ஆட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் நம்பிக்கை ஒருபோதும் பொய்க்காது.

முதல்வா் விஜய் பொறுப்பேற்றவுடன் வீட்டு மின் இணைப்பு நுகா்வோருக்கு (500 யூனிட்டுக்குள்) இரு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை, போதைப் பொருள் தடுப்புப் படை என எளிய மக்களுக்கான நலனை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அமல்படுத்தியுள்ளாா்.

இனி இதுபோல் தொடா்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கான நலத் திட்டங்களையும் முதல்வா் நிறைவேற்றுவாா். முதல்வா் விஜய் தலைமையிலான ஆட்சி அனைவருக்குமானதாக இருக்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.