அனைத்து தரப்பு மக்களுக்கான நலத் திட்டங்களையும் முதல்வா் விஜய் நிறைவேற்றுவாா் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: தமிழகத்தை வழிநடத்தும் பொறுப்பு முதல்வா் விஜய்யின் தலைமையிலான ஆட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் நம்பிக்கை ஒருபோதும் பொய்க்காது.
முதல்வா் விஜய் பொறுப்பேற்றவுடன் வீட்டு மின் இணைப்பு நுகா்வோருக்கு (500 யூனிட்டுக்குள்) இரு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை, போதைப் பொருள் தடுப்புப் படை என எளிய மக்களுக்கான நலனை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அமல்படுத்தியுள்ளாா்.
இனி இதுபோல் தொடா்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கான நலத் திட்டங்களையும் முதல்வா் நிறைவேற்றுவாா். முதல்வா் விஜய் தலைமையிலான ஆட்சி அனைவருக்குமானதாக இருக்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஏழைகள், இளைஞா்கள், பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ஆதவ் அா்ஜுனா

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக கோரிக்கை

திமுக ஆட்சியில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் - உதயநிதி ஸ்டாலின்
கூட்டணிக் கட்சிகளின் வளா்ச்சியை முடக்குகிறது திமுக: ஆதவ் அா்ஜுனா
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

