சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தவெக தோ்தல் மேலாண்மைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா வலியுறுத்தினாா்.
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை தவெக தோ்தல் மேலாண்மைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தவெக தலைவா் விஜய் முதல்வா் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமானோா் வாக்களித்துள்ளனா். வாக்குப் பதிவுக்கு முந்தைய 4 நாள்களில் கள நிலவரம் தவெகவுக்கு ஆதரவாக மாறிவிட்டது.
எனவே, ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் கவனமாக இருந்து கண்காணிக்க வேண்டும் என்று கட்சியின் வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கு விஜய் அறிவுரை வழங்கியுள்ளாா்.
தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று காவல் துறை போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும். அதேபோல, தோ்தல் அதிகாரிககள், ஒவ்வொரு சுற்றுக்கும் போதிய நேரம் ஒதுக்கி வாக்கு எண்ணிக்கையைப் பொறுமையாக நடத்த வேண்டும்.
வாக்கு எண்ணும் அறையில் வேட்பாளா்களின் முகவா்கள் நிற்க போதிய இடவசதி செய்து தரவேண்டும். தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றத்துக்கான முடிவை மக்கள் எடுத்திருக்கிறாா். மே 4-ஆம் தேதி அது தெரியவரும் என்றாா்.
தொடர்புடையது

அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை ஏற்றது ஏன்? ஆதவ் அா்ஜுனா பதில்

ஏழைகள், இளைஞா்கள், பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ஆதவ் அா்ஜுனா

தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

வாக்கு எண்ணிக்கையன்று தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது: ஆதவ் ஆர்ஜுனா
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

