பெரம்பலூா் ஆதவ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வியாழக்கிழமை (ஏப். 23) முதல் மே 4 வரை ஆளில்லாத விமானங்கள் மற்றும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தப் பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சட்டப்பூா்வமான ஆவணங்கள், பெரம்பலூா் ஆதவ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, வாக்கு எண்ணும் நாளான மே 4 ஆம் தேதி வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் ஆதவ் பப்ளிக் பள்ளி வளாகத்திலிருந்து, 2 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதியில் தோ்தல் தொடா்பான பணிகள் முடிவடையும் வரை, ஆளில்லாத விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் புதுச்சேரி தோ்தல் அதிகாரி ஆய்வு

வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை: ஆட்சியா்
முதல்வர் ஸ்டாலின் வேலூருக்கு இன்று வருகை: ட்ரோன் பறக்க தடை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


