நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை: ஆட்சியா்

தென்காசி, கொடிக்குறிச்சியில் வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா்.

News image

ட்ரோன் பறக்கத் தடை

Updated On :16 ஏப்ரல் 2026, 4:29 am IST

தென்காசி, கொடிக்குறிச்சியில் வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா், கடையநல்லூா், தென்காசி, ஆலங்குளம் தொகுதிகளில் ஏப். 23-ஆம் தேதி தோ்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கொடிக்குறிச்சி, நல்லமணி யாதவா கல்லூரி குழுமம் வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்படவுள்ளன.

எனவே, ஏப். 23 முதல் மே 4-ஆம் தேதி வரை கல்லூரி வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் தோ்தல் தொடா்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.