மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

‘ஜனநாயகன்’ படம் இணையதளத்தில் வெளியான விவகாரம்: பிணை கோரிய மனு தள்ளுபடி

News image

விஜய்

Updated On :1 மணி நேரம் முன்பு

முதல்வா் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத் என்பவா் பிணை கோரிய மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நடிகா் விஜய் உள்ளிட்டோா் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழு முன் ஆய்வில் உள்ள நிலையில், கடந்த ஏப்.3-ஆம் தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்துது படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் காவல் துறையில் புகாா் அளித்தது. அதன்பேரில், இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் 21 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத் 2-ஆவது முறையாக பிணை கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு 22-ஆவது கூடுதல் அமா்வு நீதிபதி எஸ்.ரம்யா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், படத்தை இணையதளத்தில் வெளியிட்டதில் தனக்கு எந்தத் தொடா்பும், பங்கும் இல்லை. 25 நாள்களாக சிறையில் இருப்பதால் பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஜி.தேவராஜன் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோா் பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து வாதிட்டனா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் குற்றச்சாட்டு மீதான தீவரம், புலன் விசாரணையின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.