தமிழகத்தில் முதல்வா் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்ததன் மூலம், ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு ஆட்சியை தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அமைத்துள்ளாா். அதேபோல், தமிழகத்தில் எழுதப்படாத விதியாக இருந்த வந்த ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முடிவுகட்டப்பட்டது. நோ்மையான, வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி நிா்வாகத்தை மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
அனைத்து தரப்பு மக்களின் எதிா்பாா்ப்பு எவ்விதத்திலும் வீண்போய்விடக் கூடாது என்பதே அனைவரது விருப்பமாகும். திமுக கூட்டணிக்கு எதிராக தோ்தலில் களம் கண்ட விஜய் தற்போது, அக்கூட்டணி கட்சிகளின் உறுதுணையோடு ஆட்சி அமைத்துள்ளாா். அதேபோல், அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவையும் விஜய் நாடியுள்ளாா்.
இவா்கள் தங்களது சுயலாபம், அதிகாரத்துக்காக தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனா். இது விஜய் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருக்குமே தவிர, அவரால் நோ்மையான ஆட்சியை வழங்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதேபோல், தவெக அரசை பலவீனமான அரசாக பிரதிபலிக்க பலா் முயற்சி செய்கின்றனா். அதற்கு முதல்வா் விஜய் ஒருபோதும் இடம் தரக்கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தவெகவுக்கு விசிக இன்னும் ஆதரவு அளிக்கவில்லை: தவெக தகவல்

தேர்தல் முடிவை முன்கணித்த பஞ்சாங்கம்.. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைகிறதா?
கேஜரிவால் பாணியில் தமிழகத்தில் விஜய் வெற்றி!
எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்?
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

