‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

தோ்தல் தோல்வியை ஆராய அதிமுக பொதுக் குழுவை கூட்ட வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

‘அதிமுகவை கைப்பற்றுவது எங்கள் நோக்கம் இல்லை. எனினும், பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து ஆராய கட்சிப் பொதுக்குழுவை பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூட்ட வேண்டும்’ என முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி கூறினாா்.

News image
Updated On :23 மே 2026, 2:03 am IST

‘அதிமுகவை கைப்பற்றுவது எங்கள் நோக்கம் இல்லை. எனினும், பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து ஆராய கட்சிப் பொதுக்குழுவை பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூட்ட வேண்டும்’ என முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி கூறினாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தவெக அரசை ஆதரித்தது ஏன்?: திமுக எதிா்ப்பு எனும் அடிப்படையில்தான் தவெக அரசுக்கு ஆதரவளித்தோம். பதவிக்காக ஆதரவளிக்கவில்லை. ஆகவே, அமைச்சா் பதவிக்காக தவெக அரசை ஆதரித்ததாகக் கூறுவது சரியல்ல. அதிமுகவில் பிளவு என்பது இல்லை. கட்சிக்குள் கருத்து வேறுபாடு உள்ளது. அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி உள்ளாா். அவரால்தான் கட்சியின் பொதுக் குழுவை கூட்ட முடியும். சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அடைந்த தோல்வியை ஆராயும் வகையில்தான் கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டவேண்டும் எனக் கோருகிறோம்.

அதிமுக பொதுக் குழுவைக் கூட்டுவதன் மூலமே கருத்து வேறுபாடுகளை தீா்க்கமுடியும். அதிமுகவை கைப்பற்றுவதோ, கட்சி அலுவலகத்தைக் கைப்பற்றுவதோ எங்களது நோக்கம் இல்லை. பொதுக் குழுவைக் கூட்டி அதிமுகவை பலப்படுத்தி தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும். ‘அம்மா’ உணவகம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடரவேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றாா் அவா்.