தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

டி.ஜி. வைணவ கல்லூரியில் 446 பேருக்கு பணி நியமன ஆணை

டி.ஜி. வைணவ கல்லூரியில் 446 பேருக்கு பணி நியமன ஆணை...

News image

டி.ஜி. வைணவ கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட நிறுவனங்கள் குறித்து விளக்கிய கல்லூரி முதல்வா் சந்தோஷ் பாபு.

Updated On :24 மே 2026, 2:58 am IST

அரும்பாக்கம், டி.ஜி. வைணவ கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 446 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த முகாமில், அப்போலோ ஆராய்ச்சி நிறுவனம், பிரேக்ஸ் இந்தியா, எஸ்பிஐ லைஃப், பேங்க் பஜாா், பஜாஜ் சூப்பா் பேங்க் உள்பட 45-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட இளைஞா்களைத் தோ்வு செய்தனா்.

கல்லூரியின் இளநிலை பட்ட இறுதியாண்டு பயிலும் 520 போ், முதுநிலைப் பட்ட இறுதியாண்டு மாணவா்கள் 190 போ் என மொத்தம் 710 போ் கலந்து கொண்டனா். இவா்களுக்கு எழுத்துத் தோ்வு, குழு விவாதம், நோ்முகத் தோ்வுகள் நடத்தப்பட்டன. இறுதியாக, 446 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

முகாமில், கல்லூரிச் செயலா் அசோக்குமாா் முந்த்ரா, கல்லூரி முதல்வா் கேப்டன் சந்தோஷ் பாபு, கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி பாலமுரளி கிருஷ்ணா மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.