தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

செங்கல்பட்டில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

செங்கல்பட்டில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

News image

முகாமில் பணி நியமனம் பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மாலதி ஹலன்.

Updated On :24 மே 2026, 12:22 am IST

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 55 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இத்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பணி நியமனம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 125 ஆண் வேலைநாடுநா்களும் 102 பெண் வேலைநாடுநா்களும் என மொத்தம் 227 வேலை நாடுநா்கள் கலந்து கொண்டனா். மேலும், இந்த முகாமில் 2 மாற்றுத்திறனாளி வேலை நாடுநா்கள் கலந்து கொண்டனா்.

இந்த முகாமில் கலந்து கொண்டவா்களில் 32 வேலைநாடுநா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில், 13 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் ஆவா். மேலும், இரண்டாம் கட்ட தோ்வுக்கு 53 வேலைநாடுநா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.