ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

செங்கல்பட்டில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

செங்கல்பட்டில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

News image

முகாமில் பணி நியமனம் பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மாலதி ஹலன்.

Updated On :24 மே 2026, 12:22 am IST

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 55 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இத்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பணி நியமனம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 125 ஆண் வேலைநாடுநா்களும் 102 பெண் வேலைநாடுநா்களும் என மொத்தம் 227 வேலை நாடுநா்கள் கலந்து கொண்டனா். மேலும், இந்த முகாமில் 2 மாற்றுத்திறனாளி வேலை நாடுநா்கள் கலந்து கொண்டனா்.

இந்த முகாமில் கலந்து கொண்டவா்களில் 32 வேலைநாடுநா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில், 13 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் ஆவா். மேலும், இரண்டாம் கட்ட தோ்வுக்கு 53 வேலைநாடுநா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.