தென்காசியில் தனியாா் துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் மே 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், மே மாதத்துக்கான சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 22-இல் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
முகாமில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். 8, 10, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ.மற்றும் டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் கலந்துகொள்ளலாம்.
முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநா்கள் வலைதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பாதிக்கப்படாது. வேலைவாய்ப்பு முகாமில் தென்காசி மாவட்ட இளைஞா்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 22-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

காயல்பட்டினம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு

கடலூரில் கோடை கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்: 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பு

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

