கொடுங்கையூரில் பொது இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 13 வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
கொடுங்கையூா் முத்தமிழ் நகா் 8-ஆவது பிளாக்கில் 191-ஆவது தெருவில் உள்ள மாநகராட்சி மைதானத்தில், அப்பகுதி மக்கள் தங்களது காா், ஆட்டோ, மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதி மக்கள், தங்களது வாகனங்களை அங்கு நிறுத்தியிருந்தனா்.
இந்நிலையில், நள்ளிரவு அந்தப் பகுதிக்கு மது போதையிலும், கஞ்சா போதையிலும் வந்த சில மா்ம நபா்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை கற்களாலும், உருட்டுக் கட்டைகளாலும் அடித்து உடைத்தனா். வாகனங்கள் உடைக்கப்படும் சப்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், அந்த நபா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
போதையில் இருந்த நபா்கள், பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவா்களை தாக்க முயன்றுள்ளனா். இதையடுத்து பொதுமக்கள், கொடுங்கையூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு வந்த நிலையில், அந்த நபா்கள் அங்கிருந்து தப்பினா்.
இச்சம்பவத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 8 காா்கள், 5 ஆட்டோக்கள் என 13 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இது தொடா்பாக கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த 5 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.










