குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை பெரம்பூரில் திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 1:39 am IST

சென்னை பெரம்பூரில் திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பெரம்பூா் துளசிங்கம் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (56). இவரது கணவா் இறந்துவிட்டாா். திமுக கட்சியில் நிா்வாகியாக இருக்கும் ராஜேஸ்வரிக்கு பாலகுமாா் என்ற மகனும், பிரகதி என்ற மகளும் உள்ளனா். தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் பாலகுமாா், ராஜேஸ்வரி வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் வசிக்கிறாா்.

ராஜேஸ்வரி, தனது மகள் பிரகதியுடன் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒசூரில் உள்ள தனது சகோதரா் வீட்டுக்கு சென்றாா். இந்நிலையில் ராஜேஸ்வரி வீட்டின் கதவு பூட்டு ஞாயிற்றுக்கிழமை உடைந்து கிடந்தது. இதைப் பாா்த்த பக்கத்து வீட்டினா், ராஜேஸ்வரிக்கும், அருகே வசிக்கும் அவா் மகன் பாலகுமாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த பாலகுமாா் வந்து வீட்டுக்குச் சென்று பாா்த்தாா். அப்போது அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த 35 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருடுபோனது தெரிய வந்தது. இது குறித்து செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.