பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

கலப்பட மசாலா பொருள்கள் தயாரிப்பு: ஒருவா் கைது

பழைய தில்லியின் காரி பாவ்லி பகுதியில் கலப்பட மசாலா பொருள்களைத் தயாரித்து வந்த நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது

Updated On :27 மே 2026, 4:05 am IST

பழைய தில்லியின் காரி பாவ்லி பகுதியில் கலப்பட மசாலா பொருள்களைத் தயாரித்து வந்த நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

சுமாா் 801.88 கிலோ போலி மசாலாக்கள் மற்றும் மூலப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: காரி பாவ்லி பகுதியில் உள்ள வீட்டின் கீழ்தளத்தில் கலப்பட மசாலா பொருள்கள் தயாரிக்கப்படுவதாக கடந்த மே 23-ஆம் தேதி காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் துறையினா் அங்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, தரம் குறைந்த பொருள்கள், செயற்கை நிறமூட்டிகள், மிளகாய்கள் மற்றும் பிற கலப்பட பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றைப் பயன்படுத்தி போலி மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, மாம்பழ பொடி, கரம் மசாலா ஆகியவை தயாரிக்கப்பட்டு தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டது.

இதுதொடா்பாக முகுந்த்பூரை சோ்ந்த கமல்ஜீத் கைதுசெய்யப்பட்டாா்.

மசாலா அரைக்கும் இயந்திரங்களும் அந்த இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த எடை சுமாா் 801.88 கிலோ

சட்ட விதிகளின்படி, இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் அனைத்தும் ‘இ-சாக்ஷ்ய’ செயலியில் புகைப்படங்களாகவும் காணொலிகளாகவும் பதிவு செய்யப்பட்டன. னாா்.

இந்தச் சோதனையின்போது, தில்லி அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து, பறிமுதல் செய்யப்பட்ட மசாலாப் பொருட்களின் மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைக்காகவும், உணவுப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும் சேகரித்தனா்.

பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.