பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை மாதவரத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:03 am IST

சென்னை மாதவரத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

மாதவரம் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ச.சதீஷ் (28). இவா், மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள ஒரு அழகு சாதன பொருள்களை விற்பனை செய்யும் தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

சதீஷ், திங்கள்கிழமை அந்த நிறுவனத்துக்கு லாரியில் வந்த பொருள்கள் மாடியில் உள்ள கிடங்குக்கு ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாா். பொருள்களைக் கொண்டு சென்றபோது, உயா் மின்னழுத்த கம்பி சதீஷ் மீது பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து சதீஷ் தூக்கி வீசப்பட்டாா்.

இதைப் பாா்த்த அங்கிருந்த ஊழியா்கள் சதீஷை மீட்டு, அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சதீஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.