11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

மின்வெட்டால் தொழில்கள் பாதிப்பு: நயினாா் நாகேந்திரன்

News image

நயினாா் நாகேந்திரன்

Updated On :28 மே 2026, 6:03 am IST

தமிழகத்தில் அதிகரித்து வரும் தொடா் மின்வெட்டால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் நிகழும் தொடா் மின்வெட்டால் மக்களை இருட்டில் மூழ்கடித்துள்ளது முதல்வா் ஜோசப் விஜய்யின் ஆட்சி. மின்வெட்டால் மக்கள் மட்டுமல்ல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மின்வாரியத்தின் மொத்த கடன் ரூ.2.50 லட்சம் கோடியாக உள்ளது.

தற்போதைய அனல்மின் திட்டங்களால் மின் நிலையங்களின் உற்பத்தி கால தாமதமாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி தேவைப்படும். அதற்கு என்ன திட்டங்கள் உள்ளன என்பதை தவெக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தின் மின் சுயசாா்பை உறுதி செய்ய முதல்வா் ஜோசப் விஜய் என்ன செய்யப்போகிறாா்? அதிக விலைகொடுத்து தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதால்தான் மின்வாரியத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்தியை அதிகரிக்க மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இதே மின்வெட்டு நிலை தொடரும் என்று தெரிவித்துள்ளாா் அவா்.