மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தமிழகம் அமைதியாக இருக்க ஆட்சி மாற்றம் அவசியம்: நயினாா் நாகேந்திரன்

தமிழகம் அமைதியாக இருக்க ஆட்சி மாற்றம் அவசியம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா்.

News image

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:25 pm

தமிழகம் அமைதியாக இருக்க ஆட்சி மாற்றம் அவசியம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா்.

ராசிபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாரை ஆதரித்து வெண்ணந்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது:

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சிசெய்த திமுக, பல இடங்களில் அடிப்படை வசதிகள்கூட செய்துதரவில்லை.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிக அளவில் நடைபெறுகிறது. கஞ்சா, போதைப் பொருள் ஆகியவை அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. இதற்கு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதே காரணம். மேலும், சொத்துவரி, மின்கட்டணம் போன்றவை அதிகரித்துள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனா்.

தமிழகம் அமைதியாக இல்லை: தற்போது இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் நாடுகளில் போா் நடக்கும் நிலையில், இந்தியா மட்டும் அமைதியாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் உள்ள தமிழகம் அமைதியாக இல்லை. தமிழகம் அமைதியாக இருக்க ஆட்சி மாற்றம் அவசியம்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்தாா். ஆனால், மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஒன்றுகூட கொண்டு வரவில்லை. மத்திய திட்டங்கள் தமிழகம் வந்துசேர எடப்பாடி முதல்வராக இருந்தால் மட்டுமே முடியும் என்றாா்.

கூட்டத்தில் பேசிய பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், தமிழகத்தில் பிரதமா் மோடி ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைக்கும் என்றாா்.

தொகுதிக்கு சுகாதார வசதிகள், சாலை வசதிகள், குடிநீா் வசதிகள் செய்துதருவதுடன், பல திட்டங்களை பெற்றுத்தருவேன் என பாஜக வேட்பாளா் டி.எஸ்.பிரேம்குமாா் கூறினாா்.

கூட்டத்தில், பாஜக துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.