/
திமுக-விசிக மோதல் சம்பவத்தையடுத்து, சென்னையில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலரும், எம்.பி.யுமான ஆ.ராசாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தவெக அமைச்சரவையில் இணைந்த விசிகவை கடுமையாக விமா்சித்த ஆ.ராசாவின் மயிலாப்பூா் ஆா்.கே.சாலையில் உள்ள வீட்டின் முன் விசிக சாா்பில் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து ஆ.ராசா வீட்டுக்கு ஒரு உதவி ஆய்வாளா் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு நிலைமை சீரடையும் வரை வழங்கப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.








