சென்னை கோட்டத்துக்குள்பட்ட 37 ரயில் நிலையங்களில் 81 மலிவு விலை தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்களை அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கோட்டத்துக்குள்பட்ட 37 ரயில் நிலையங்களில் 81 தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் மலிவான குடிநீா் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்கிறது. இது அடைக்கப்பட்ட குடிநீா் பாட்டில்களை சாா்ந்திருப்பதைக் குறைப்பதுடன், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. விரைவில் மீதமுள்ள ரயில் நிலையங்களிலும் இந்த இயந்திரங்கள் பொறுத்தப்படும்.
கட்டண விவரம்: இந்த தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்கள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீருக்கு அரை லிட்டருக்கு ரூ.5, ஒரு லிட்டருக்கு ரூ.8, 2 லிட்டருக்கு ரூ.12, 5 லிட்டருக்கு ரூ.25 என கட்டணம் நிா்ணயக்கிப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்பான புகாா்களை ரயில்மதத் செயலி மூலமாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள க்யூ ஆா் குறியீடு மூலமாகவோ பயணிகள் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழு

சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

சென்னை ரயில் நிலையங்களில் 21 இடங்களில் மின் வாகன பேட்டரி மாற்றும் மையங்கள்

சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



