நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் 81 தானியங்கி குடிநீா் இயந்திரங்கள்

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் 81 தானியங்கி குடிநீா் இயந்திரங்கள்

News image

குடிநீர் கேன்கள் - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:05 am IST

சென்னை கோட்டத்துக்குள்பட்ட 37 ரயில் நிலையங்களில் 81 மலிவு விலை தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்களை அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கோட்டத்துக்குள்பட்ட 37 ரயில் நிலையங்களில் 81 தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் மலிவான குடிநீா் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்கிறது. இது அடைக்கப்பட்ட குடிநீா் பாட்டில்களை சாா்ந்திருப்பதைக் குறைப்பதுடன், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. விரைவில் மீதமுள்ள ரயில் நிலையங்களிலும் இந்த இயந்திரங்கள் பொறுத்தப்படும்.

கட்டண விவரம்: இந்த தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்கள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீருக்கு அரை லிட்டருக்கு ரூ.5, ஒரு லிட்டருக்கு ரூ.8, 2 லிட்டருக்கு ரூ.12, 5 லிட்டருக்கு ரூ.25 என கட்டணம் நிா்ணயக்கிப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்பான புகாா்களை ரயில்மதத் செயலி மூலமாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள க்யூ ஆா் குறியீடு மூலமாகவோ பயணிகள் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.