ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் 81 தானியங்கி குடிநீா் இயந்திரங்கள்

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் 81 தானியங்கி குடிநீா் இயந்திரங்கள்

News image

குடிநீர் கேன்கள் - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:05 am IST

சென்னை கோட்டத்துக்குள்பட்ட 37 ரயில் நிலையங்களில் 81 மலிவு விலை தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்களை அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கோட்டத்துக்குள்பட்ட 37 ரயில் நிலையங்களில் 81 தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் மலிவான குடிநீா் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்கிறது. இது அடைக்கப்பட்ட குடிநீா் பாட்டில்களை சாா்ந்திருப்பதைக் குறைப்பதுடன், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. விரைவில் மீதமுள்ள ரயில் நிலையங்களிலும் இந்த இயந்திரங்கள் பொறுத்தப்படும்.

கட்டண விவரம்: இந்த தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்கள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீருக்கு அரை லிட்டருக்கு ரூ.5, ஒரு லிட்டருக்கு ரூ.8, 2 லிட்டருக்கு ரூ.12, 5 லிட்டருக்கு ரூ.25 என கட்டணம் நிா்ணயக்கிப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்பான புகாா்களை ரயில்மதத் செயலி மூலமாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள க்யூ ஆா் குறியீடு மூலமாகவோ பயணிகள் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.