சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் 24 போ் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினா் மாநில உளவுத் துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஒடிஸா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா வழியாக சென்னை வரும் விரைவு ரயில்களில் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் அதிகம் கடத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. 2025-26-ஆம் ஆண்டில் மட்டும் சென்னை சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் வடமாநில ரயில்களில் கடத்தி வரப்பட்ட நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா ரயில்வே பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, போதைப் பொருள் ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை காவல் துறை ஆய்வாளா் ஜி.எழில்வேந்தன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருப்புப் பாதை போலீஸாா் 14 போ், ரயில்வே பாதுகாப்புப் படையினா் 10 போ் இடம் பெற்றுள்ளனா். அவா்கள் காலை, இரவு என தலா 12 நபா்களாக தொடா்ந்து 24 மணி நேரக் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறப்புக் குழுவினா் ஒடிஸாவில் இருந்து விஜயவாடா வழியாக சென்னை சென்ட்ரல் வந்த ரயில் பெட்டியில் சோதனையிட்டு 14 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றி, 2 பேரைக் கைது செய்தனா்.
விசாரணையில் ஒடிஸா மாநிலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் பெரிய சந்தையில் கஞ்சா வாங்கப்பட்டு ரயில் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு கேரளத்துக்கு எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் ஒடிஸா மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து ரயில்களையும் சிறப்புக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா். அவா்கள் எழும்பூா், பெரம்பூா் ரயில் நிலையங்களிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
ரயில் நிலைய சிறப்புக் குழுவினருடன் தமிழக உளவுத் துறையைச் சோ்ந்த 3 போ் இணைந்தும் தனியாகவும் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், அவா்களுடன் சிறப்புக் குழுவினா் தகவல் பரிமாற்றம் செய்து செயல்படுவதாகவும் ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ரயிலில் கஞ்சா கடத்தல்: சிறுவன் உள்ளிட்ட 4 போ் கைது

போத்தனூா் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் சேவை நீடிப்பு

புதரில் வீசப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 223 கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



