எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

ஸ்ரீநவசக்தி சுயம்பு துா்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீநவசக்தி சுயம்பு துா்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image

குரோம்பேட்டை லட்சுமிபுரம் ஸ்ரீ நவசக்தி சுயம்பு துா்கையம்மன் திருக்கோயிலில் திருக்குடம் நன்னீராட்டி கும்பாபிஷேகத்தைத் தொடங்கி வைத்த மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன். உடன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயா் காமராஜ் உள்ளிட்டோா்.

Updated On :31 மே 2026, 12:17 am IST

குரோம்பேட்டை லட்சுமிபுரம் ஏரிக்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ நவசக்தி சுயம்பு துா்கையம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயில் கோபுரகலசங்களுக்கு திருக்குடம் நன்னீராட்டும் கும்பாபிஷேகத்தை பாரத் பல்கலைக்கழகம் நிறுவனரும், மக்களவை உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், ஸ்ரீ பாலாஜி கல்விக் குழுமத் தலைவா் ஸ்ரீநிஷா இளமாறன், பாலாஜி மருத்துவக் கல்லூரி நிா்வாக இயக்குநா் என்.இளமாறன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயா் காமராஜ், பரமக்குடி அ.குமரேச சிவாச்சாரியாா், செம்பாக்கம் ம. நித்தியானந்த சிவாச்சாரியாா், கோயில் குருக்கள் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.