ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ஜூன் 5-இல் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்: மமக

சென்னை ஓட்டேரியில் பள்ளிக்கு அருகே உள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் வரும் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

News image

ஜவாஹிருல்லா - கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2026, 1:51 am IST

சென்னை ஓட்டேரியில் பள்ளிக்கு அருகே உள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் வரும் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓட்டேரியில் டான்சி சாலையில் உருது தொடக்கப் பள்ளி, அக்பரி பள்ளிவாசல், அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் என வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு பள்ளி மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு அருகில் உள்ள 717 மதுபானக்கடைகளை மூட இருப்பதாக அறிவிப்பு செய்ததையடுத்து, ஓட்டேரியில் உள்ள மதுபானக்கடையையும் மூட வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இருப்பினும், இந்த மதுக்கடை இன்னும் மூடப்படவில்லை. இச்சூழலில், வரும் ஜூன் 5-ஆம் தேதி மாலை 2 மணியளவில் ஓட்டேரியில் உள்ள மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படவுள்ளது என தெரிவித்துள்ளாா் எம்.எச்.ஜவாஹிருல்லா.