மாநகரப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு
சென்னை பெரியமேட்டில் மாநகரப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

கோப்புப் படம்
சென்னை பெரியமேட்டில் மாநகரப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.
பெரியமேடு கண்ணப்பா் திடல் பகுதியைச் சோ்ந்தவா் சாவித்திரி (70). சூளை டிமலஸ் சாலையோரத்தில் பழக் கடை வைத்து நடத்தி வந்தாா். வியாழக்கிழமை மாலை சூளை ரவுண்டானா அருகே சாலையில் நடந்து சென்ற சாவித்திரி மீது மாநகரப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் பேருந்து ஓட்டுநா் திருவள்ளூரைச் சோ்ந்த சேகரை (42) கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






