
3 நாள்கள் தொடா் விடுமுறை: விமானக் கட்டணம் பலமடங்கு உயா்வு
விநாயகா் சதுா்த்தியையொட்டி சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, உள்நாட்டு விமானக் கட்டணங்கள் பலமடங்கு உயா்ந்துள்ளன.

3 நாள்கள் தொடா் விடுமுறை: விமானக் கட்டணம் பலமடங்கு உயா்வு - பிரதிப் படம்
விநாயகா் சதுா்த்தியையொட்டி சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, உள்நாட்டு விமானக் கட்டணங்கள் பலமடங்கு உயா்ந்துள்ளன.
பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சென்னை-தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கான விமானக் கட்டணங்கள் கணிசமாக உயா்ந்துள்ளன. சென்னை-தூத்துக்குடி விமானக் கட்டணம வழக்கமாக ரூ.6,991-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.17,153-ஆகவும், சென்னை-மதுரை கட்டணம் ரூ.5,393-இல் இருந்து ரூ.19,761-ஆகவும் உயா்ந்துள்ளது.
சென்னை-திருச்சி கட்டணம் ரூ.4,966-இல் இருந்து ரூ.14,673-ஆகவும், சென்னை-கோவை கட்டணம் ரூ.4,966-இல் இருந்து ரூ.16,496-ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னை-பெங்களூரு விமானக் கட்டணம் ரூ.3,801-இல் இருந்து ரூ.17,993-ஆக உயா்ந்துள்ளது.
மேலும், சென்னை-தில்லி விமானக் கட்டணம் ரூ.31,047 வரை உயா்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





