டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆர்கே நகர் தொகுதியில் பணம் கொடுத்த கட்சியை தடை செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா செய்த அரசியல் கட்சியை தடை செய்ய வேண்டும் என தேமுதிக மாநில மகளிர் அணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த்

News image
காஞ்சிபுரத்தில் கொலையான தேமுதிக பிரமுகர் சரவணனின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா.
Updated On :29 ஜனவரி 2024, 2:17 pm

DIN

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா செய்த அரசியல் கட்சியை தடை செய்ய வேண்டும் என தேமுதிக மாநில மகளிர் அணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த்கூறினார்.
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த தேமுதிக தலைமைக்கழக பேச்சாளர் சரவணன் கடந்த 6-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அவரது இல்லத்தில் சரவணனின் உருவப் படத்தை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். குழந்தைகளின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாயைச் செலுத்தினார். மேலும் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்பதாக தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாஜி, கண்ணதாசன், சுரேஷ், சந்துரு ஆகியோரை அடுத்து சரவணன் 5-வது நபராகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற தொடர் கொலை சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. காஞ்சிபுரத்தில் 2014-இல் 29 கொலைகள், 2015இல் 32 கொலைகள், 2016-ல் 34 கொலைகள், கடந்த 3 மாதத்தில் 12 கொலைகள் என கோயில் நகரான காஞ்சிபுரம் கொலை நகரமாக மாறி உள்ளது. சரவணன் கொலையோடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முதலில் வேட்பாளரை அறிவித்தது தேமுதிக தான். பணப்பட்டுவாடா அதிகளவில் நடந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா செய்தது எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் தடை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட வேட்பாளரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் வருமா என்ற நிலையில் விரைவில் பொதுத் தேர்தலே வரக்கூடிய சூழல் தமிழகத்தில் உருவாகி உள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்றிவிட்டு குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடை திறப்பது மக்களுக்கு விரோதமானது. தில்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான முதல்வர், நிரந்தர ஆளுநர் வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியின்போது, மாநில பொருளாளர் இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், நகர பொறுப்பாளர் சாட்சி சண்முகசுந்தரம், முன்னாள் நகரச் செயலாளர் ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.