தென்னை மரம் சாய்ந்து இளைஞர் சாவு

சாலவாக்கம் அருகே தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
Updated on
1 min read

சாலவாக்கம் அருகே தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் ஊராட்சி அருகே புதுப்பட்டைச் சேர்ந்தவர் வேலு (எ) வேளாங்கண்ணி (34). இவரது வீடு புதுப்பட்டு அருகே கரும்பாக்கத்தில் உள்ளது. இவர் தனது வீட்டில் புதன்கிழமை ஓய்வுக்காக படிக்கட்டில் உட்கார்ந்திருந்ததாகத் தெரிகிறது. அப்போது, அருகில் வலுவிழந்த நிலையில் இருந்த தென்னை மரம் இருந்துள்ளது. பலத்த காற்று வீசியதன் காரணமாக, வலுவிழுந்திருந்த தென்னைமரம் வேலு மீது சாய்ந்த நிலையில் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த வேலு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சாலவாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com