மறைமலைநகரை அடுத்த நின்னக்கரை காட்டுப்பகுதியில் மரத்தில் கூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஆண், பெண் ஆகிய இருவரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன.
நின்னைக்கரை அருகே காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களின் சடலங்கள் அழுகிய நிலையில் இருப்பதாகவும் மறைமலைநகர் போலீஸாருக்கு கடதந்த ஞாயிற்றுக்கிழமை தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து அந்த சடலங்களை மீட்ட போலீஸார் அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் உத்தரமேரூரை அடுத்து மணல்மேடு புத்தலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களில் விநாயகமூர்த்திக்கு (30) என்பவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். விநாயகமூர்த்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரகுவின் மனைவி நிஷாவுக்கும் (25) தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதை குடும்பத்தார் எதிர்த்ததைத் தொடர்ந்து இருவரும் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு 10 நாள்கள் இருக்கும் என்று தெரிகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

ராசிபுரம் தொகுதி: நேரடி போட்டியில் சூரியன், தாமரையில் இரு மருத்துவா்கள்!

அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

