பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வரும் 11ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அக்கட்சியினர் படப்பை பஜார் பகுதியில் வணிகர்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், அதை அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் வரும் 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.
இந்நிலையில், அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, வன்னியர் சங்கத்தின் குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் வைப்பூர் ரமேஷ் தலைமையில் பாமக தொண்டர்கள் படப்பை பஜார் பகுதியில் உள்ள வணிகர்களிடம் திங்கள்கிழமை துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். இதில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர் ஜெயகாந்தன், வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியச் செயலாளர்கள் தேவேந்திரன், பாஸ்கர சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தைப்பேறு அருளும் இறைவன்

கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!

மே மாதப் பலன்கள் - மீனம்

நடிகர் அஜித்துக்கு இபிஎஸ், அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

